Thursday, February 07, 2008

ஹ்ருதய சக்திபத்

அருட்தாயின் புதிய ஏற்பாடு

சுபம் மிகுந்த வேளையான இப்போதே
புனிதம் மிகுந்த தலமான இங்கேயே
எல்லோருக்கும் எல்லாவற்றுக்கும் தாயாக விளங்கும் நான்
நம் பிரிவு மற்றும் பெருந்துன்பத்தின் மாயையை விலக்கி
உன்னையும் அன்னை பூமியில் வாழும் எல்லோரையும் எல்லாவற்றையும் தெளிவித்து
இதோ உம்மோடு சங்கமிக்கிறேன்.
உன் தலையுச்சித் தாமரையையும், இருதய கமலத்தையும்,
சஞ்ஜீவனிக் கரங்களையும், மூலாதாரச் செம்பூவையும்,
பாத மல்ர்களையும்,
இதோ நான் திறக்கிறேன்.
உன்னை அரவணைத்து என் மொத்த இருப்பையும் வழங்கி
இதோ நான் உனக்கு சக்தி தருகிறேன்.
இரண்டரக் கலந்த நம் ஒருமை மற்றும் நித்யானந்தத்தின் அதிசயத்தை
இதோ நீ அனுபவித்துக்க் கொண்டிருக்கிறாய்.
உனக்குள்ளும், உன்னூடேயும், உன்னைச் சுற்றிலும்
பரிபூரண ஆரோக்கியமாகவும், நித்திய ஜீவனாகவும்,
எனதெல்லா நலங்களாகவும்,
உனதெல்லா நிலைகளிலும்
இவ்வதிசயம் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது.
என் செல்லக் கொழுந்தே!
இரண்டரக் கலந்த நம் ஒருமையை உறுதிப்படுத்தும்
என் புதிய ஏற்பாடு இது.
நீ இதை மதித்து வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறாய்.
நன்றி.

சக்தி தரிசனம்

என் அருட்பார்வை உன் மீது மழை போல் பொழிகிறது.
என் இருதய கமலத்தின் அன்பொளி உன்னைக் கனிவுடன் அரவணைக்கிறது.
என் நேசக் கரங்கள் உன்னை வாஞ்சையுடன் வாழ்த்துகின்றன.
உன்னை சுகப்படுத்தவே என் திருவடிகளை
அன்னை பூமியில் நான் ஊன்றியிருக்கிறேன்.
பரிபூரண ஆரோக்கியத்தோடு நித்திய ஜீவனையும்
எனதெல்லா நலங்களையும்
இதோ நான் உனக்குத் தருகிறேன்.
என் இரகசியங்களை நீ வெளிப்படுத்தவும்
என் அதிசயங்களை நீ செய்து காட்டவும்
இதோ நான் உனக்கு சக்தி தரிகிறேன்.
ஓம். ஓம் சக்தி. ஓம் சக்தி. ஓம் சக்தி. ஓம். ஓம்.

மிகவும் சக்தி வாய்ந்த "ஹ்ருதய சக்திபத்" என அழைக்கப்படும் அருட்தாயின் தீட்சை உம்மைத் தேடி வருகிறது. நன்றியறிதலுடன் இவ்வரிய தீட்சையை இருதய பூர்வமாக ஏற்றுக் கொள்வீராக! கீழ்க்கண்ட பாடலைப் பாடி மகிழ்வீராக! தீட்சையை உறுதிப்படுத்திக் கொள்வீராக!

அருட்தாயின் தீட்சையை உறுதிப்படுத்தும் பாட்டு

அம்மையாய் அப்பனாய்க் குருவாய்த் திரித்துவ ஒருமையாய் விளங்குமம்மா!
பிதா குமாரனாய் சுத்த ஆவியாய்த் திரித்துவ ஒருமையாய் விளங்குமம்மா!
அல்லாவாய் ரூவாய்க் ரசூலாய்த் திரித்துவ ஒருமையாய் விளங்குமம்மா!
தலைக்கு மேல் நீ வந்தாயம்மா! தன்னிறைவுத் தன்மை தந்தாயம்மா!
தலைய்ச்சியில் நீ வந்தாயம்மா! உன் அவதார மகிமை தந்தாயம்மா!
நெற்றிக்குள் நீ வந்தாயம்மா! ஆவியின் பரிசுத்தம் தந்தாயம்மா!
தொண்டைக்குள் நீ வந்தாயம்மா! ஆன்மாவின் புனிதம் தந்தாயம்மா!
தொண்டையின் கீழ் நீ வந்தாயம்மா! ஆன்ம நேயம் தந்தாயம்மா!
மார்புக்குள் நீ வந்தாயம்மா! சச்சிதானந்தம் தந்தாயம்மா!
மார்பின் கீழ் நீ வந்தாயம்மா! மனத்தெளிவை நீ தந்தாயம்மா!
நாபிக்குள் நீ வந்தாயம்மா! சுத்த தேகம் தந்தாயம்மா!
நாபியின் கீழ் நீ வந்தாயம்மா! மெய்யுணர்வை நீ தந்தாயம்மா!
முதுகடியில் நீ வந்தாயம்மா! உன் பூரணத்துவம் தந்தாயம்மா!
அன்னை பூமிக்குள் வந்தாயம்மா! ஜீவனுள்ள தண்ணீர் தந்தாயம்மா!
அன்னை பூமிக்குள் வந்தாயம்மா! அமிதானந்தம் தந்தாயம்மா!
அன்னை பூமிக்குள் வந்தாயம்மா! காயகற்பம் தந்தாயம்மா!
எனக்குள்ளே நீ வந்தாயம்மா! உனதெல்லா நலங்களும் தந்தாயம்மா!
நன்றியம்மா! நன்றியம்மா! உனக்கு என் இதயங்கனிந்த நன்றியம்மா!

No comments: