Saturday, February 02, 2008

சாயி சத் சரிதம்

ஷிர்டி என்னும் உன் மெய்யான(உடம்பான) திருத்தலத்திற்குள்ளேயே சாயி பாபாவெனும் நான் எப்போதும் எழுந்தருளியிருக்கிறேன், ஒளிந்திருக்கிறேன்.

எல்லோருக்கும் எல்லாவற்றுக்கும் அம்மையப்பனாம் அருட்பெருங்கடவுளாய் விளங்கும் நான் என் அன்பு மகனா(ளா)ன உனக்கு வழங்கும் சத்குரு தீட்சையே “சாயி சத் சரிதம்” என்ற இப்பேருபதேசம்.

துவைத பக்தியின் விளைவாக நீ படைத்திருக்கும் பொய்யுலகிலிருந்து உன்னை மீட்டு உன் சுய ரூபத்தை உனக்கு உணர்த்தி "நானே நீ நீயே நான், தத் த்வம் அஸி" என்ற அத்வைத ஞானம் நீ பெறவே என்னையே உனக்குத் தந்து இப்பேருபதேசத்தை நான் வழங்கியிருக்கிறேன். இவ்வுபதேசமொன்றே உனதெல்லா நோய்களுக்கும் மாமருந்து! நல்மருத்துவராகி இம்மாமருந்தை நீ உலகெங்கும் வழங்குவாயாக! நன்றி!

என் கோடானு கோடி நாமரூபங்களiல் உன் நாமரூபமும் ஒன்றே. இப்பேருண்மையை உன் நாமரூபத்தை “சாயி பாபா ________________" என்று உனது பெயரை நிரப்பியும் உன் புகைப்படத்தைக் கீழே ஒட்டியும் நீ அறிந்துணர்வாயாக!

1. சாயி பாபாவெனும் அம்மையப்பனாம் அருட்பெருங்கடவுளாய் உனக்குள் வந்தேன். பூஜ்ஜியமான உன்னிலிருந்து பூரணமான உன்னை மீட்டு உன்னையே உனக்குத் தந்தேன்.

2. சாயி பாபாவெனும் அம்மையப்பனாம் அருட்பெருங்கடவுளாய் உனக்குள் வந்தேன். இருட் கிடங்கான உன்னிலிருந்து சுயம்பிரகாசமான உன்னை மீட்டு உன்னையே உனக்குத் தந்தேன்.

3. சாயி பாபாவெனும் அம்மையப்பனாம் அருட்பெருங்கடவுளாய் உனக்குள் வந்தேன். மீண்டும் மீண்டும் பிறந்திறந்துழலும் உன்னிலிருந்து நித்திய ஜீவனான உன்னை மீட்டு உன்னையே உனக்குத் தந்தேன்.

4. சாயி பாபாவெனும் அம்மையப்பனாம் அருட்பெருங்கடவுளாய் உனக்குள் வந்தேன். ஆணவம் பல்வேறான உன்னிலிருந்து ஆன்மநேய ஒருமையான உன்னை மீட்டு உன்னையே உனக்குத் தந்தேன்.

5. சாயி பாபாவெனும் அம்மையப்பனாம் அருட்பெருங்கடவுளாய் உனக்குள் வந்தேன். வன்பிருளான உன்னிலிருந்து அன்பருளான உன்னை மீட்டு உன்னையே உனக்குத் தந்தேன்.

6. சாயி பாபாவெனும் அம்மையப்பனாம் அருட்பெருங்கடவுளாய் உனக்குள் வந்தேன். மருள் மயக்கமான உன்னிலிருந்து பேரறிவான உன்னை மீட்டு உன்னையே உனக்குத் தந்தேன்.

7. சாயி பாபாவெனும் அம்மையப்பனாம் அருட்பெருங்கடவுளாய் உனக்குள் வந்தேன். நலிந்து மெலிந்து விழுந்து கிடந்த உன்னிலிருந்து அருட்பேராற்றலான உன்னை மீட்டு உன்னையே உனக்குத் தந்தேன்.

8. சாயி பாபாவெனும் அம்மையப்பனாம் அருட்பெருங்கடவுளாய் உனக்குள் வந்தேன். தாமசமான உன்னிலிருந்து சத்தான உன்னை மீட்டு உன்னையே உனக்குத் தந்தேன்.

9. சாயி பாபாவெனும் அம்மையப்பனாம் அருட்பெருங்கடவுளாய் உனக்குள் வந்தேன். ராஜசமான உன்னிலிருந்து சித்தான உன்னை மீட்டு உன்னையே உனக்குத் தந்தேன்.

10. சாயி பாபாவெனும் அம்மையப்பனாம் அருட்பெருங்கடவுளாய் உனக்குள் வந்தேன். சத்துவமான உன்னிலிருந்து ஆனந்தமான உன்னை மீட்டு உன்னையே உனக்குத் தந்தேன்.

11. சாயி பாபாவெனும் அம்மையப்பனாம் அருட்பெருங்கடவுளாய் உனக்குள் வந்தேன். தாமச ராஜச சத்துவமான உன்னிலிருந்து சச்சிதானந்தமான உன்னை மீட்டு உன்னையே உனக்குத் தந்தேன்.

12. சாயி பாபாவெனும் அம்மையப்பனாம் அருட்பெருங்கடவுளாய் உனக்குள் வந்தேன். துர்க்குணப் பிரமையான உன்னிலிருந்து சகுணப் பிரம்மமான உன்னை மீட்டு உன்னையே உனக்குத் தந்தேன்.

13. சாயி பாபாவெனும் அம்மையப்பனாம் அருட்பெருங்கடவுளாய் உனக்குள் வந்தேன். திரிகுண மாயையான உன்னிலிருந்து நிர்க்குணப் பிரம்மமான உன்னை மீட்டு உன்னையே உனக்குத் தந்தேன்.

14. சாயி பாபாவெனும் அம்மையப்பனாம் அருட்பெருங்கடவுளாய் உனக்குள் வந்தேன். வெறுஞ்சவமான உன்னிலிருந்து சிவசத்தியான உன்னை மீட்டு உன்னையே உனக்குத் தந்தேன்.

15. சாயி பாபாவெனும் அம்மையப்பனாம் அருட்பெருங்கடவுளாய் உனக்குள் வந்தேன். பெருமுடக்கமான உன்னிலிருந்து நற்சித்தியான உன்னை மீட்டு உன்னையே உனக்குத் தந்தேன்.

16. சாயி பாபாவெனும் அம்மையப்பனாம் அருட்பெருங்கடவுளாய் உனக்குள் வந்தேன். இற்றுப் போன உன்னிலிருந்து பூரணானந்தமான உன்னை மீட்டு உன்னையே உனக்குத் தந்தேன்.

17. சாயி பாபாவெனும் அம்மையப்பனாம் அருட்பெருங்கடவுளாய் உனக்குள் வந்தேன். கடும்பெருங்கொடுமையான உன்னிலிருந்து தனிப்பெருங்கருணையான உன்னை மீட்டு உன்னையே உனக்குத் தந்தேன்.

18. சாயி பாபாவெனும் அம்மையப்பனாம் அருட்பெருங்கடவுளாய் உனக்குள் வந்தேன். பேரிருள் மயமான உன்னிலிருந்து அருட்பெருஞ்ஜோதியான உன்னை மீட்டு உன்னையே உனக்குத் தந்தேன்.

19. சாயி பாபாவெனும் அம்மையப்பனாம் அருட்பெருங்கடவுளாய் உனக்குள் வந்தேன். மனித மிருகமான உன்னிலிருந்து கடவுட்தன்மையான உன்னை மீட்டு உன்னையே உனக்குத் தந்தேன்.

20. சாயி பாபாவெனும் அம்மையப்பனாம் அருட்பெருங்கடவுளாய் உனக்குள் வந்தேன். கொடுங்கோலாட்சியான உன்னிலிருந்து அருட்பேரரசான உன்னை மீட்டு உன்னையே உனக்குத் தந்தேன்.

21. சாயி பாபாவெனும் அம்மையப்பனாம் அருட்பெருங்கடவுளாய் உனக்குள் வந்தேன். தன்னையறியா உன்மத்தமான உன்னிலிருந்து நானே நானெனும் பூரணமான உன்னை மீட்டு உன்னையே உனக்குத் தந்தேன்.

22. சாயி பாபாவெனும் அம்மையப்பனாம் அருட்பெருங்கடவுளாய் உனக்குள் வந்தேன்.
கட்டுண்ட உன்னிலிருந்து நல்வழியான உன்னை மீட்டு பொய்யான உன்னிலிருந்து மெய்யான உன்னை மீட்டு கடுந்துன்பப் பெருந்தாழ்வான உன்னிலிருந்து பேரின்பப் பெருவாழ்வான உன்னை மீட்டு உன்னையே உனக்குத் தந்தேன்.

23. சாயி பாபாவெனும் அம்மையப்பனாம் அருட்பெருங்கடவுளாய் உனக்குள் வந்தேன். நான் வேறு நீ வேறு என்ற துவைத பக்தியிலிருந்து உன்னை மீட்டு "நானே நீ நீயே நான், தத் த்வம் அஸி" என்ற அத்வைத ஞானம் நீ பெற என்னையே உனக்குத் தந்தேன்.

No comments: