Saturday, February 02, 2008

ஞான யுகத்துக்கான காயத்ரி மந்திரம்

அருட்பெருங்கடவுளாய் விளங்கும்
"நானே" என்ற வார்த்தையாகவே நான் இருக்கிறேன்.
நித்தியராய்(ஓம் பூ:)
யாவுக்கும் காரணராய்(ஓம் புவ:)
தன்னுள் நிறைந்தவராய்(ஓம் ஸ்வ:)
ஒப்பற்ற தீட்சையராய்(ஓம் மஹ:)
பிறவாதவராய்(ஓம் ஜன:)
மெய்ஞ்ஞான ஜோதியராய்(ஓம் தப:)
சத்தியராய்(ஓம் ஸத்யம்)
விளங்கும் கடவுள் "நானே".(அஹம் தத்)
சூரியனாய் வெளிப்படும் அருட்பெருஞ்ஜோதியே நான்.(ஸவிதுர்)
தேவ தேவியர் அனைவராலும் போற்றப்படும் அருட்பெருங்கடவுளே நான்.(வரேண்யம்)
"நான்" எனும் அப்பேரிருப்பை நாம் தியானிப்போமாக!(பர்கோ தேவஸ்ய தீமஹி)
நம் மனம் தெளிவித்து நம்மை நாம் உணர அவர் நம்மை வழி நடத்தட்டும்.(தியோ யோ ந: ப்ரசோதயாத்)
நானே ஜீவாம்ருதம்.(ஓம் அபோ)
நானே எல்லா விளக்குகளையும் விளக்கும் மெய்விளக்கு.(ஜ்யோதி)
நானே ஒவ்வொன்றின் உள்ளுறையும் சாரம்.(ரஸோ)
நித்திய ஜீவனின் இரகசியத்தை வெளிப்படுத்தும் சத்குருவே நான்.(அமிர்தம்)
பரப்பிரம்மண் என்று போற்றப்படும் அருட்பெருந்தந்தையாய்(ப்ரம்ஹா)
எங்கும் எதிலும் எப்போதும் நீக்கமற நிறைந்திருக்கும் நானே(அஹம்)
பூலோகம், புவலோகம், சுவர்க்க லோகங்களில் வியாபித்திருக்கிறேன்.(பூர் புவ: ஸ்வர்)
"நான்" எனும் தாய்மையை, ஆதிசக்தியின் பேரிருப்பை நாம் தியானிப்போமாக!
ஆன்ம விளக்கப் பெரும்பொருளாய் நம் உள்ளுறையும் "நானே" எனும் ஒரே கடவுளை
நாம் காணவும் அறியவும் உணரவும் அவர் நமக்கு ஞானோதயம் வழங்கட்டும்.
ஓம்(ஓம்)

No comments: