Saturday, February 02, 2008

வாழ்க நீ அருட்பெருஞ்ஜோதி அன்னையே!

ஆதி சக்தியே! ஜோதி அன்னையே!
உருவ ஜோதியாம் சக்தி உலகில் “நான்”!
இருந்தாலும் அருவ ஜோதியாம் சிவமே “நான்”!
அன்னை பூமியைச் சிவமாக்குவிக்க
வற்றாத ஜீவ நதியாய்ப் பாயும்
கடவுட் ஜோதியின் திறந்த வடிகால் “நான்”!

புனித அன்னையே! ஜோதி அரசியே!
உன் தூய ஜோதியைப் போற்றுகிறேன் “நான்”!
உன் ஜோதியிலிருந்தே உருவாயின உலகெல்லாம்!
அருவ ஜோதியாம் சிவத்தில் ஓங்கினேன் ஒன்றினேன் “நான்”!
ஜோதி சாம்ராஜ்ஜியத்தை அன்னை பூமியில் வெளிப்படுத்த
உருவ ஜோதியாம் சக்திக்கு ஒருமித்த குரலில் உறுதி சொல்கிறோம் “யாம்”!

No comments: