Tuesday, February 26, 2008

'க' சொல்லும் மெய்ஞ்ஞானமும் மதநல்லிணக்கமும்



நானே
வழியும்
சத்தியமும்
ஜீவனுமாய்
இருக்கிறேன்.


குரு நாதர் இயேசு கிறிஸ்துவின் இந்த மெஞ்ஞான சூத்திரம், மேற்காட்டப்பட்டுள்ள "" என்ற உயிர்மெய்யெழுத்தின் சமன்பாட்டில் உள்ளடங்கியிருக்கிறது. மத நல்லிணக்கத்தையும் வலியுறுத்துகிறது.

நானே (உயிர்மெய் ஒருமை, திரித்துவ ஒருமை)
க் மெய், சத்தியம் (பரமபிதா, பரப்பிரம்மண், அல்லா)
+ வழி, உயிராம் ஜீவனும், மெய்யாம் சத்தியமும் ஒன்றும் வழி (கிறிஸ்து, சத்குரு, ரசூல் அல்லது நபிகள்)
உயிர், ஜீவன் (பரிசுத்த ஆவி, ஆதிசக்தி, புனித ரூ)
= இருக்கிறேன்

உயிராய் மெய்யாய் அவையொன்றும் வழியாய்
உயிர்மெய் என்றுளேன் நானே


ஒண்ணாயிருக்கக் கத்துக்கணும் இந்த
உண்மையைச் சொன்னா ஒத்துக்கணும்
காக்காக் கூட்டத்தைப் பாருங்க அதுக்கு
கத்துக் கொடுத்தது யாருங்க

(திரைப்பாடல் வரிகள்)

கா கா கா என்று தொண்டை கிழியக் கத்தி மேற்சொன்ன மெய்ஞ்ஞானத்தையும் மத நல்லிணக்கத்தையும் வலியுறுத்துகிறதோ காக்காக் கூட்டம். "" என்ற எழுத்து தமிழில் எண் ஓன்றைக் குறிக்கப் பயன் படும் வல்லெழுத்து தானே! இந்த ஒருமையை வலியுறுத்தும் காக்காக் குரு வாழ்க! காக்காக் குரு தீட்சை கற்போம்! ஒருமையில் நிற்போம்! குரு நாதர் இயேசு கிறிஸ்துவின் இந்த மெஞ்ஞான சூத்திரத்தின் பொருள் உணர்வோம்!

No comments: