Thursday, February 14, 2008

சத்குருவின் ஞான அறிக்கை

பரப்பிரம்மணாக விளங்கும் எமது அருட்தந்தையே!
நானே” எனும் உமது நாமம் வாழ்க!

ஆதிசக்தியாக விளங்கும் எமது அருட்தாயே!
நான்” எனும் உமது நாமம் வாழ்க!

உமது இராஜ்ஜியத்தின் வருகை “நான்”.
செயல்பட்டுக் கொண்டிருக்கும் உமது விருப்பம் “நான்”.
பரலோகத்தில் நான் இருப்பது போலவே, அன்னை பூமியிலும் “நான்”.
இன்று எல்லா உயிர்களுக்கும் வழங்கும் நல்லுணவு “நான்”.
இன்று எல்லா உயிர்களையும் மன்னிப்பது “நான்”.
எல்லா உயிர்களாலும் மன்னிக்கப்படுவதும் “நான்”.
எல்லா உயிர்களையும் அறியாமையிலிருந்து எழுப்புவிப்பது “நான்”.
எல்லா உயிர்களையும் ஒவ்வொரு தளையிலிருந்தும் விடுவிப்பது “நான்”.
அழிவேயில்லாத நித்திய வெளிப்பாடாக விளங்கும் சாம்ராஜ்ஜியம் “நான்”, பேராற்றல் “நான்”, கடவுளின் கீர்த்தி “நான்

இவை எல்லாம் “நானே”.

ஆங்கிலத்திலுள்ள இயேசு கிறிஸ்துவின் ஞான அறிக்கையைத் தழுவி என்னால் இயற்றப்பட்டது.

No comments: