Saturday, February 02, 2008

சர்வ சமய சமரச சுத்த சன்மார்க்க "நான்" சங்கம் வழங்கும் ஞான யுகத்துக்கான உறுதி மொழி

என் உடம்பு ஆதிசக்தியின் திருக்கோயிலாய் இருக்கிறது.
என் உடம்பு பரிசுத்த ஆவியின் புனித தேவாலயமாய் இருக்கிறது.
என் உடம்பு புனித ரூவின் பள்ளி வாசலாய் இருக்கிறது.

என் மூச்சில் பரப்பிரம்மணின் சக்திப் பிரவாகம் ஓயாமல் ஓடிக்கொண்டிருக்கிறது.
என் மூச்சில் பரமபிதாவின் கிருபை ஓயாமல் ஓடிக்கொண்டிருக்கிறது.
என் மூச்சில் அல்லாவின் அருள் வெள்ளம் ஓயாமல் ஓடிக்கொண்டிருக்கிறது.

என் மனம் சத்குருவின் அருள்வாக்கையும் அருட்ஜோதியையும் உலகெங்கிலும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது.
என் மனம் கிறிஸ்துவின் ஜீவவசனத்தையும் ஞானஒளியையும் உலகெங்கிலும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது.
என் மனம் நபிகளின் அருண்மொழியையும் அன்பொளியையும் உலகெங்கிலும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது.

அன்னை பூமியில் ஆதிசக்தி பரப்பிரம்மண் சத்குருவின் பரிபூரண வெளிப்பாடாய் நான் இருக்கிறேன்.
அன்னை பூமியில் பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் பரிபூரண வெளிப்பாடாய் நான் இருக்கிறேன்.
அன்னை பூமியில் அல்லா ரூ நபிகளின் பரிபூரண வெளிப்பாடாய் நான் இருக்கிறேன்.

அன்னை பூமியில் ஆதிசக்தி பரப்பிரம்மண் சத்குருவின் பரிபூரண வெளிப்பாடாய் நான் என்னை அறிகிறேன்.
அன்னை பூமியில் பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் பரிபூரண வெளிப்பாடாய் நான் என்னை அறிகிறேன்.
அன்னை பூமியில் அல்லா ரூ நபிகளின் பரிபூரண வெளிப்பாடாய் நான் என்னை அறிகிறேன்.

நானே முதலும் நடுவும் முடிவுமாய் இருக்கிறேன்.
நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறேன்.
அல்லா ஒருவனே தேவன். எல்லோரும் அல்லாவின் மக்களே. அல்லாவின் தூதுவனாகவே நான் இருக்கிறேன். அல்லாவின் தூதுவனாகவே நான் என்னை அறிகிறேன்.
ஓம். ஆமேன். ஆமீன்.

No comments: