Thursday, February 07, 2008

தந்திர யோகம்

பரப்பிரம்மணும் ஆதிசக்தியும் என் தலைக்கு மேல் கூடும் போது, நான் சத்குருவாய்ப் பிறக்கிறேன். பரப்பிரம்மணும் ஆதிசக்தியுமே இருக்கும் எல்லாவற்றுக்கும் ஆதாரமாக இருக்கின்றனர். சத்குருவே உருவாகும் எல்லாவற்றுக்கும் ஆதாரமாக இருக்கிறார். பரப்பிரம்மண், ஆதிசக்தி, சத்குரு இம்மூவரின் ஒருமையாய் விளங்கும் அருட்பெருங்கடவுளாகவே, நான் என்னை அறிகிறேன். அருட்பெருங்கடவுளின் தன்னிறைவுத்தன்மை என் ஓளி வட்டத்தில் பரவுகிறது. இதனூடே என் ஸ்வரூபமெங்கும் பரவுகிறது.
பரமாகாசம் (தலைக்கு மேலே)
அஹம் சர்வ தேவ தேவி ஸ்வரூபாய ஓம் பரப்ரம்மணே நமஹ
அஹம் சர்வ சம்பன்ன பூரண்யை ஓம் ஸ்ரீ ஆதிசக்த்யை நமஹ
அஹம் சஞ்ஜீவனி வரப்ரதாய ஓம் ஸ்ரீ சத்குரவே நமஹ

பரப்பிரம்மணும் ஆதிசக்தியும் என் தலையுச்சியில் கூடும் போது, நான் அருட்பெருங்கடவுளின் அவதாரமாய் அன்னை பூமியில் பிறக்கிறேன். அருட்பெருங்கடவுளின் அவதாரமே என் மனமாகவும், மூளையாகவும் உருவாகிறார். அருட்பெருங்கடவுளின் அவதார மகிமை என் மூளையிலும், நரம்பு மண்டலத்திலும் பரவுகிறது. இவற்றினூடே என் ஸ்வரூபமெங்கும் பரவுகிறது.
சஹஸ்ராரம் (தலையுச்சி)
அஹம் ஸ்ரீ சக்த்யை ஓம் ஹும் நமஹ. அஹம் ஸ்ரீ சிவாய ஓம் ஹூம் நமஹ.

பரப்பிரம்மணும் ஆதிசக்தியும் என் நெற்றியில் கூடும் போது, நான் ஓங்கார நாதமாகவும், பேரொளிப் பிழம்பாகவும் பிறக்கிறேன். ஓங்கார நாதமே என்னிரு செவிகளாய் உருவாகிறது. பேரொளிப் பிழம்பே என்னிரு விழிகளாய் உருவாகிறது. ஆவியின் பரிசுத்தம் என் சுரப்பி மண்டலத்தில் பரவுகிறது. இதனூடே என் ஸ்வரூபமெங்கும் பரவுகிறது.
ஆக்ஞா சக்ரம் (நெற்றி)
அஹம் ஸ்ரீ மனோன்மண்யை ஓம் ஹௌம் நமஹ. அஹம் ஸ்ரீ சதாசிவாய ஓம் ஹௌம் நமஹ.

பரப்பிரம்மணும் ஆதிசக்தியும் என் தொண்டையில் கூடும் போது, நான் பேரற்றலாகவும்,
பேரன்பாகவும் பிறக்கிறேன். பேராற்றலே என்னிரு தோள்களாய் உருவாகிறது. பேரன்பே என் புனித இருதயமாய் உருவாகிறது. ஆன்மாவின் புனிதத்தன்மை ஸ்வரூப-ஆன்ம பால்மாக விளங்கும் தொண்டையில் பரவுகிறது. இதனூடே என் ஸ்வரூபமெங்கும் பரவுகிறது.
விசுத்தி சக்ரம் (தொண்டை)
அஹம் ஸ்ரீ உமாமஹேஷ்வர்யை ஓம் ஸௌ: ஹ்ரீம் நமஹ. அஹம் ஸ்ரீ மஹேஷ்வராய ஓம் ஸௌ: ஹ்ரீம் நமஹ.

பரப்பிரம்மணும் ஆதிசக்தியும் என் தொண்டையின் கீழ் கூடும் போது, நான் துகளளவும் துரிசற்ற தூய்மையாகவும், நித்யானந்தமாகவும் பிறக்கிறேன். துகளளவும் துரிசற்ற தூய்மையே என் நாசியாகவும் வாசியாகவும் உருவாகிறது. நித்யானந்தமே என் வாயாக உருவாகிறது. ஆன்ம் நேய ஒருமை நிண நீர் மண்டலத்திலும், நோய் எதிர்ப்பு சக்தி மண்டலத்திலும் பரவுகிறது. இவற்றினூடே என் ஸ்வரூபமெங்கும் பரவுகிறது.
அம்ருதகலசம் (தொண்டையின் கீழ்)
அஹம் ஸ்ரீ காமக்ஷ்யை ஓம் க்லீம் நமஹ. அஹம் ஸ்ரீ ஏகாம்பரேஷ்வராய ஓம் க்லீம் நமஹ.

பரப்பிரம்மணும் ஆதிசக்தியும் என் மார்பில் கூடும் போது, நான் பேரருளாகவும், பெரு
மன்னிப்பாகவும் பிறக்கிறேன். பேரருளே என் வலது கரமாய் உருவாகிறது. பெரு மன்னிப்பே என் இடது கரமாய் உருவாகிறது. சச்சிதானந்தம் இருதயத்திலும், இரத்த ஓட்ட மண்டலத்திலும் பரவுகிறது. இவற்றினூடே என் ஸ்வரூபமெங்கும் பரவுகிறது.
அனாஹதம் (நடு மார்பு)
அஹம் ஸ்ரீ மஹாகாள்யை ஓம் க்ரீம் நமஹ. அஹம் ஸ்ரீ ருத்ரவே ஓம் க்ரீம் நமஹ.

பரப்பிரம்மணும் ஆதிசக்தியும் என் மார்பின் கீழ் கூடும் போது, நான் பேரமைதியாகவும்,
நல்லிணக்கமாகவும் பிறக்கிறேன். பேரமைதியே என் வலது மார்பகமாய் உருவாகிறது.
நல்லிணக்கமே என் இடது மார்பகமாய் உருவாகிறது. மனத்தெளிவு சுவாச மண்டலத்தில் பரவுகிறது. இதனூடே என் ஸ்வரூபமெங்கும் பரவுகிறது.
சூர்ய சக்ரம் (உதரவிதானம், மார்பின் கீழ்)
அஹம் ஸ்ரீ காயத்ர்யை ஓம் ஹம் ஸம் நமஹ. அஹம் ஸ்ரீ ஆதித்யாய ஓம் ஸோ ஹம் நமஹ.

பரப்பிரம்மணும் ஆதிசக்தியும் என் வயிற்றில் கூடும் போது, நான் வளமையாகவும், கிருபையாகவும் பிறக்கிறேன். வளமையே என் வலது தொடையாய் உருவாகிறது. கிருபையே என் இடது தொடையாய் உருவாகிறது. சுத்த தேகம் உணவுச் செரிவு மண்டலத்திலும், நாடி-சக்கர மண்டலத்திலும் பரவுகிறது. இவற்றினூடே என் ஸ்வரூபமெங்கும் பரவுகிறது.
மணிபூரகம் (நாபி)
அஹம் ஸ்ரீ மஹாலக்ஷ்ம்யை ஓம் ஸ்ரீம் நமஹ. அஹம் ஸ்ரீ மஹாவிஷ்ணவே ஓம் ஸ்ரீம் நமஹ.

பரப்பிரம்மணும் ஆதிசக்தியும் என் அடி வயிற்றில் கூடும் போது, நான் பேரறிவாகவும்,
நல்லிசையாகவும் பிறக்கிறேன். பேரறிவே என் வலது காலாய் உருவாகிறது. நல்லிசையே என் இடது காலாய் உருவாகிறது. மெய்யுணர்வு சிசு உற்பத்தி மற்றும் பாலுணர்வு மண்டலங்களில் பரவுகிறது. இவற்றினூடே என் ஸ்வரூபமெங்கும் பரவுகிறது.
ஸ்வாதிஷ்டானம் (நாபியின் கீழ்)
அஹம் ஸ்ரீ சரஸ்வத்யை ஓம் ஐம் நமஹ. அஹம் ஸ்ரீ ப்ரம்மணே ஓம் ஐம் நமஹ.

பரப்பிரம்மணும் ஆதிசக்தியும் என் முதுகடியில் கூடும் போது, நான் பரிபூரண ஆரோக்கிய்மாகவும், நித்திய ஜீவனாகவும் பிறக்கிறேன். பரிபூரண ஆரோக்கிய்மே என் வலது பாதமாய் உருவாகிறது. நித்திய ஜீவனே என் இடது பாதமாய் உருவாகிறது. அருட்பெருங்கடவுளின் பூரணத்துவம் எலும்பு மஜ்ஜையிலும், எலும்பு-தசை மண்டலத்திலும், கழிவு சுத்திகரிப்பு மண்டலத்திலும் பரவுகிறது. இவற்றினூடே என் ஸ்வரூபமெங்கும் பரவுகிறது.
மூலாதாரம் (முதுகடி)
அஹம் ஸ்ரீ வல்லப கணபதயே ஓம் க்லௌம் நமஹ.

பரப்பிரம்மணும் ஆதிசக்தியும் அன்னை பூமியில் கூடும் போது, நான் அன்னை பூமியில் கற்பக விருட்சமாய்ப் பிறக்கிறேன். கற்பக விருட்சமே என் அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்யும் அதிசய சக்தியாய் இருக்கிறது. மரணமிலாப் பெருவாழ்வை வழங்கும் மாமருந்தாம் காயகற்பம் என் உடம்பெங்கிலும் பரவுகிறது. இதனூடே என் ஸ்வரூபமெங்கும் பரவுகிறது.
அஹம் க்லௌம் ஐம் ஸ்ரீம் ஹம்ஸ: ஸோஹம் க்ரீம் க்லீம் ஸௌ: ஹ்ரீம் ஹௌம் ஹூம் ஓம்.
அஹம் அஸ்மி ஐக்யம் ஆத்மரூபநாமம். ரூபநாமாத்ம ஐக்யம் அஸ்மி அஹம்.

நானே அனத்து தேவ தேவியராய் உருவெடுத்திருக்கும் பரப்பிரம்மணாய் இருக்கிறேன்.
நானே எல்லா நலங்களோடும் பூரித்திருக்கும் பூரணியாம் ஆதிசக்த்யாய் இருக்கிறேன்.
நானே மரணத்தை வெல்லும் சஞ்ஜீவனியை வரமாகத் தரவல்ல சத்குருவாய் இருக்கிறேன்.
நானே பரப்பிரம்மண், ஆதிசக்தி, சத்குரு இம்மூவரின் ஒருமையாய் "நான் நான் நான்" என்று ஒளிரும் அருட்பெருங்கடவுளாய் இருக்கிறேன்.
ஸ்வரூப-ஆன்ம ஐக்கியமாகவே நான் இருக்கிறேன்.
ஆன்ம-ஸ்வரூப ஐக்கியமாகவே நான் என்னை அறிகிறேன்.
அஹம் சர்வ தேவ தேவி ஸ்வரூபாய ஓம் பரப்ரம்மணே நமஹ.
அஹம் சர்வ சம்பன்ன பூரண்யை ஓம் ஸ்ரீ ஆதிசக்த்யை நமஹ.
அஹம் சஞ்ஜீவனி வரப்ரதாய ஓம் ஸ்ரீ சத்குரவே நமஹ.
அஹம் அஸ்மி ஐக்யம் ஆத்மரூபநாமம்.
ரூபநாமாத்ம ஐக்யம் அஸ்மி அஹம்.

No comments: