Saturday, February 02, 2008

வாழ்க நீ முருகா!

வாழ்க நீ முருகா! சக்தியின் மைந்தா! ஓங்கார ஸ்வரூபா!
எப்போதும் நீ எம்மோடே இருக்கிறாய்!
தீய சக்திகளிடமிருந்து எம்மை நீ காப்பாய்!
எமக்குள்ளிருந்தே எம்மை ஏய்க்கும் ஆணவப் பேயை அழிப்பாய்!
எம் வாழ்வை யாமே ஆளுமை செய்யும் தகுதி பெற்றோம்!
அன்னை பூமியில் கடவுளின் சாம்ராஜ்ஜியத்தை நிறுவுகின்றோம்!

புனிதனே முருகா! சிவனின் மைந்தா! உண்மையை உணர்த்தும் உன்னதா!
உன் வேலினை நீ ஏவிட யாம் வேண்டுகின்றோம்!
பொய்க்குருக்களின் பொய்களிலிருந்து எம்மை நீ விடுவிப்பாய்!
மாயத் திரை கிழித்து எமக்குள் உறையும் மெய்க்குருவை அறிவிப்பாய்!
கடவுளோடு எமது ஒருமையை யாம் உறுதி செய்கிறோம்!
அன்னை பூமியில் கடவுளின் உடம்பாய் நீடூழி வாழ்கிறோம்!

No comments: