Thursday, February 07, 2008

சிவ-சக்தி ஐக்கிய தியானம்

அன்னை வல்லபையே! தந்தை மகாகணபதியே! "நானே" எனும் ஒருமைப் பெருநிலைக்குள் சிவமும் சக்தியும் தம் புனித ஐக்கியத்தில் இன்புற்றிருப்பதை போல், நீவிர் என் முதுகடியிலுள்ள மூலாதார சக்கரத்தில் உம் புனித ஐக்கியத்தில் இன்புற்றிருக்கிறீர். உம் புனித ஐக்கியத்தை அனுமதித்து மூலாதார சக்கரத்தை, "நானே" எனும் ஒருமைப் பெருநிலையின் கடவுட்தன்மையால் நான் புனித மயமாக்குகிறேன்.

அன்னை சரஸ்வதியே! தந்தை பிரம்மரே! "நானே" எனும் ஒருமைப் பெருநிலைக்குள் சிவமும் சக்தியும் தம் புனித ஐக்கியத்தில் இன்புற்றிருப்பதை போல், நீவிர் என் நாபிக்குக் கீழுள்ள சுவாதிட்டான சக்கரத்தில் உம் புனித ஐக்கியத்தில் இன்புற்றிருக்கிறீர். உம் புனித ஐக்கியத்தை அனுமதித்து சுவாதிட்டான சக்கரத்தை, "நானே" எனும் ஒருமைப் பெருநிலையின் அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணையால் நான் புனித மயமாக்குகிறேன்.

அன்னை மகாலட்சுமியே! தந்தை மகாவிஷ்ணுவே! "நானே" எனும் ஒருமைப் பெருநிலைக்குள் சிவமும் சக்தியும் தம் புனித ஐக்கியத்தில் இன்புற்றிருப்பதை போல், நீவிர் என் நாபியிலுள்ள மணிபூரக சக்கரத்தில் உம் புனித ஐக்கியத்தில் இன்புற்றிருக்கிறீர். உம் புனித ஐக்கியத்தை அனுமதித்து மணிபூரக சக்கரத்தை, "நானே" எனும் ஒருமைப் பெருநிலையின் அருட்பேராற்ற்லால் நான் புனித மயமாக்குகிறேன்.

அன்னை காயத்ரியே! தந்தை ஆதித்யரே! "நானே" எனும் ஒருமைப் பெருநிலைக்குள் சிவமும் சக்தியும் தம் புனித ஐக்கியத்தில் இன்புற்றிருப்பதை போல், நீவிர் என் மார்பின் கீழ்
உதரவிதானத்திலுள்ள சூரிய சக்கரத்தில் உம் புனித ஐக்கியத்தில் இன்புற்றிருக்கிறீர். உம் புனித
ஐக்கியத்தை அனுமதித்து சூரிய சக்கரத்தை, "நானே" எனும் ஒருமைப் பெருநிலையின் பேரறிவால் நான் புனித மயமாக்குகிறேன்.

அன்னை காளியே! தந்தை ருத்திரரே! "நானே" எனும் ஒருமைப் பெருநிலைக்குள் சிவமும் சக்தியும் தம் புனித ஐக்கியத்தில் இன்புற்றிருப்பதை போல், நீவிர் என் நாபியிலுள்ள அனாகத சக்கரத்தில் உம் புனித ஐக்கியத்தில் இன்புற்றிருக்கிறீர். உம் புனித ஐக்கியத்தை அனுமதித்து அனாகத சக்கரத்தை, "நானே" எனும் ஒருமைப் பெருநிலையின் பேரன்பால் நான் புனித மயமாக்குகிறேன்.

அன்னை காமாட்சியே! தந்தை ஏகாம்பரேஸ்வரரே! "நானே" எனும் ஒருமைப் பெருநிலைக்குள் சிவமும் சக்தியும் தம் புனித ஐக்கியத்தில் இன்புற்றிருப்பதை போல், நீவிர் என் தொண்டைக்குக் கீழுள்ள அமிர்த கலச சக்கரத்தில் உம் புனித ஐக்கியத்தில் இன்புற்றிருக்கிறீர். உம் புனித ஐக்கியத்தை அனுமதித்து அமிர்த கலச சக்கரத்தை, "நானே" எனும் ஒருமைப் பெருநிலையின் ஆன்ம நேயத்தால் நான் புனித மயமாக்குகிறேன்.

அன்னை மகேஸ்வரியே! தந்தை மகேஸ்வரரே! "நானே" எனும் ஒருமைப் பெருநிலைக்குள் சிவமும் சக்தியும் தம் புனித ஐக்கியத்தில் இன்புற்றிருப்பதை போல், நீவிர் என் தொண்டையிலுள்ள விசுத்தி சக்கரத்தில் உம் புனித ஐக்கியத்தில் இன்புற்றிருக்கிறீர். உம் புனித ஐக்கியத்தை அனுமதித்து விசுத்தி சக்கரத்தை, "நானே" எனும் ஒருமைப் பெருநிலையின் நித்திய ஜீவனால் நான் புனித மயமாக்குகிறேன்.

அன்னை மனோண்மணியே! தந்தை சதாசிவரே! "நானே" எனும் ஒருமைப் பெருநிலைக்குள் சிவமும் சக்தியும் தம் புனித ஐக்கியத்தில் இன்புற்றிருப்பதை போல், நீவிர் என் நெற்றியிலுள்ள ஆக்ஞா சக்கரத்தில் உம் புனித ஐக்கியத்தில் இன்புற்றிருக்கிறீர். உம் புனித ஐக்கியத்தை அனுமதித்து ஆக்ஞா சக்கரத்தை, "நானே" எனும் ஒருமைப் பெருநிலையின் சுயம்பிர்காசத்தால் நான் புனித மயமாக்குகிறேன்.

அன்னை ஆதிசக்தியே! தந்தை பரப்பிரம்மணே! நீவிர் என் தலையுச்சியிலுள்ள சகஸ்ரார சக்கரத்தில் "நானே" எனும் ஒருமைப் பெருநிலைக்குள்ளிருந்து எழும், அதற்குள்ளேயே மூழ்கியிருக்கும் சிவ-சக்தியாய் உம் புனித ஐக்கியத்தில் இன்புற்றிருக்கிறீர். உம் புனித ஐக்கியத்தை அனுமதித்து சகஸ்ரார சக்கரத்தை, "நானே" எனும் ஒருமைப் பெருநிலையின் பூரணத்துவத்தால் நான் புனித மயமாக்குகிறேன்.

No comments: