Thursday, February 14, 2008

ஞானப் பெருவிண்ணப்பம்

நானே என விளங்கும் வெட்டவெளியான அருட்தந்தையே!
சக்தி கொடு! சக்தி கொடு! சக்தி கொடு!

நான் என்ற இறையாற்றலான அருட்தாயே!
பக்தி கொடு! பக்தி கொடு! பக்தி கொடு!

தலைமகனும் தலைமகளும் ஞான விளக்குமாகும் அருட்குருவே!
புத்தி கொடு! புத்தி கொடு! புத்தி கொடு!

இம்மூவரும் ஒன்றிய என் பேரிருப்பின் வல்லமையே!
முக்தி கொடு! முக்தி கொடு! முக்தி கொடு!

நானே என விளங்கும் வெட்டவெளியான அருட்தந்தையே!
நான் என்ற இறையாற்றலான அருட்தாயே!
தலைமகனும் தலைமகளும் ஞான விளக்குமாகும் அருட்குருவே!
இம்மூவரும் ஒன்றிய என் பேரிருப்பின் வல்லமையே!
சித்தி கொடு! சித்தி கொடு! சித்தி கொடு!

அப்படியே ஆகட்டும். அப்படியே ஆனது. ஆமேன். ஓம்.
நானே. நான் இருக்கிறேன். நான் அறிகிறேன். நான் என்னை அறிகிறேன்.
நான் என்னை அறிகிறேன். நான் அறிகிறேன். நான் இருக்கிறேன். நானே.

No comments: