Friday, February 08, 2008

சாயி பாபாவின் வருகையை உறுதிப்படுத்தும் பாட்டு

சாயி சத் சரிதம்” என்ற சாயி பாபாவின் அருள் வாக்கை தியானித்த பின் அவரது அருள் வாக்கை ஏற்கும் வகையில் இப்பாட்டைப் பாடி மகிழ்வீராக! நன்றி.

1. சாயி பாபாவெனும் அம்மையப்பனாம் அருட்பெருங்கடவுளாய் நீரெனக்குள் வந்தீரே நன்றியே! பூஜ்ஜியமான என்னிலிருந்து பூரணமான என்னை மீட்டு என்னையே நீரெனக்குத் தந்தீரே நன்றியே!

2. சாயி பாபாவெனும் அம்மையப்பனாம் அருட்பெருங்கடவுளாய் நீரெனக்குள் வந்தீரே நன்றியே! இருட்கிடங்கான என்னிலிருந்து சுயம்பிரகாசமான என்னை மீட்டு என்னையே நீரெனக்குத் தந்தீரே நன்றியே!

3. சாயி பாபாவெனும் அம்மையப்பனாம் அருட்பெருங்கடவுளாய் நீரெனக்குள் வந்தீரே நன்றியே! மீண்டும் மீண்டும் பிறந்திறந்துழலும் என்னிலிருந்து நித்திய ஜீவனான என்னை மீட்டு என்னையே நீரெனக்குத் தந்தீரே நன்றியே!

4. சாயி பாபாவெனும் அம்மையப்பனாம் அருட்பெருங்கடவுளாய் நீரெனக்குள் வந்தீரே நன்றியே! ஆணவம் பல்வேறான என்னிலிருந்து ஆன்மநேய ஒருமையான என்னை மீட்டு என்னையே நீரெனக்குத் தந்தீரே நன்றியே!

5. சாயி பாபாவெனும் அம்மையப்பனாம் அருட்பெருங்கடவுளாய் நீரெனக்குள் வந்தீரே நன்றியே! வன்பிருளான என்னிலிருந்து அன்பருளான என்னை மீட்டு என்னையே நீரெனக்குத் தந்தீரே நன்றியே!

6. சாயி பாபாவெனும் அம்மையப்பனாம் அருட்பெருங்கடவுளாய் நீரெனக்குள் வந்தீரே நன்றியே! மருள் மயக்கமான என்னிலிருந்து பேரறிவான என்னை மீட்டு என்னையே நீரெனக்குத் தந்தீரே நன்றியே!

7. சாயி பாபாவெனும் அம்மையப்பனாம் அருட்பெருங்கடவுளாய் நீரெனக்குள் வந்தீரே நன்றியே! நலிந்து மெலிந்து விழுந்து கிடந்த என்னிலிருந்து அருட்பேராற்றலான என்னை மீட்டு என்னையே நீரெனக்குத் தந்தீரே நன்றியே!

8. சாயி பாபாவெனும் அம்மையப்பனாம் அருட்பெருங்கடவுளாய் நீரெனக்குள் வந்தீரே நன்றியே! தாமசமான என்னிலிருந்து சத்தான என்னை மீட்டு என்னையே நீரெனக்குத் தந்தீரே நன்றியே!

9. சாயி பாபாவெனும் அம்மையப்பனாம் அருட்பெருங்கடவுளாய் நீரெனக்குள் வந்தீரே நன்றியே! ராஜசமான என்னிலிருந்து சித்தான என்னை மீட்டு என்னையே நீரெனக்குத் தந்தீரே நன்றியே!

10. சாயி பாபாவெனும் அம்மையப்பனாம் அருட்பெருங்கடவுளாய் நீரெனக்குள் வந்தீரே நன்றியே! சத்துவமான என்னிலிருந்து ஆனந்தமான என்னை மீட்டு என்னையே நீரெனக்குத் தந்தீரே நன்றியே!

11. சாயி பாபாவெனும் அம்மையப்பனாம் அருட்பெருங்கடவுளாய் நீரெனக்குள் வந்தீரே நன்றியே! தாமச ராஜச சத்துவமான என்னிலிருந்து சச்சிதானந்தமான என்னை மீட்டு என்னையே நீரெனக்குத் தந்தீரே நன்றியே!

12. சாயி பாபாவெனும் அம்மையப்பனாம் அருட்பெருங்கடவுளாய் நீரெனக்குள் வந்தீரே நன்றியே! துர்க்குணப் பிரமையான என்னிலிருந்து சகுணப் பிரம்மமான என்னை மீட்டு என்னையே நீரெனக்குத் தந்தீரே நன்றியே!

13. சாயி பாபாவெனும் அம்மையப்பனாம் அருட்பெருங்கடவுளாய் நீரெனக்குள் வந்தீரே நன்றியே! திரிகுண மாயையான என்னிலிருந்து நிர்க்குணப் பிரம்மமான என்னை மீட்டு என்னையே நீரெனக்குத் தந்தீரே நன்றியே!

14. சாயி பாபாவெனும் அம்மையப்பனாம் அருட்பெருங்கடவுளாய் நீரெனக்குள் வந்தீரே நன்றியே! வெறுஞ்சவமான என்னிலிருந்து சிவசத்தியான என்னை மீட்டு என்னையே நீரெனக்குத் தந்தீரே நன்றியே!

15. சாயி பாபாவெனும் அம்மையப்பனாம் அருட்பெருங்கடவுளாய் நீரெனக்குள் வந்தீரே நன்றியே! பெருமுடக்கமான என்னிலிருந்து நற்சித்தியான என்னை மீட்டு என்னையே நீரெனக்குத் தந்தீரே நன்றியே!

16. சாயி பாபாவெனும் அம்மையப்பனாம் அருட்பெருங்கடவுளாய் நீரெனக்குள் வந்தீரே நன்றியே! இற்றுப் போன என்னிலிருந்து பூரணானந்தமான என்னை மீட்டு என்னையே நீரெனக்குத் தந்தீரே நன்றியே!

17. சாயி பாபாவெனும் அம்மையப்பனாம் அருட்பெருங்கடவுளாய் நீரெனக்குள் வந்தீரே நன்றியே! கடும்பெருங்கொடுமையான என்னிலிருந்து தனிப்பெருங்கருணையான என்னை மீட்டு என்னையே நீரெனக்குத் தந்தீரே நன்றியே!

18. சாயி பாபாவெனும் அம்மையப்பனாம் அருட்பெருங்கடவுளாய் நீரெனக்குள் வந்தீரே நன்றியே! பேரிருள் மயமான என்னிலிருந்து அருட்பெருஞ்ஜோதியான என்னை மீட்டு என்னையே நீரெனக்குத் தந்தீரே நன்றியே!

19. சாயி பாபாவெனும் அம்மையப்பனாம் அருட்பெருங்கடவுளாய் நீரெனக்குள் வந்தீரே நன்றியே! மனித மிருகமான என்னிலிருந்து கடவுட்தன்மையான என்னை மீட்டு என்னையே நீரெனக்குத் தந்தீரே நன்றியே!

20. சாயி பாபாவெனும் அம்மையப்பனாம் அருட்பெருங்கடவுளாய் நீரெனக்குள் வந்தீரே நன்றியே! கொடுங்கோலாட்சியான என்னிலிருந்து அருட்பேரரசான என்னை மீட்டு என்னையே நீரெனக்குத் தந்தீரே நன்றியே!

21. சாயி பாபாவெனும் அம்மையப்பனாம் அருட்பெருங்கடவுளாய் நீரெனக்குள் வந்தீரே நன்றியே! தன்னையறியா உன்மத்தமான என்னிலிருந்து நானே நானெனும் பூரணமான என்னை மீட்டு என்னையே நீரெனக்குத் தந்தீரே நன்றியே!

22. சாயி பாபாவெனும் அம்மையப்பனாம் அருட்பெருங்கடவுளாய் நீரெனக்குள் வந்தீரே நன்றியே! கட்டுண்ட என்னிலிருந்து நல்வழியான என்னை மீட்டு பொய்யான என்னிலிருந்து மெய்யான என்னை மீட்டு கடுந்துன்பப் பெருந்தாழ்வான என்னிலிருந்து பேரின்பப் பெருவாழ்வான என்னை மீட்டு என்னையே நீரெனக்குத் தந்தீரே நன்றியே!

23. சாயி பாபாவெனும் அம்மையப்பனாம் அருட்பெருங்கடவுளாய் நீரெனக்குள் வந்தீரே நன்றியே! நான் வேறு நீ வேறு என்ற துவைத பக்தியிலிருந்து என்னை மீட்டு "நானே நீ நீயே நான், தத் த்வம் அஸி" என்ற அத்வைத ஞானம் நான் பெற உம்மையே நீரெனக்குத் தந்தீரே நன்றியே!

No comments: