Friday, February 08, 2008

நான் யார்?

இருப்பில் இருப்பாய் இருப்பை அறியுமெய்ப்
பொருளாய் இருக்கிறேன் நான்

இருப்பில் தானாய்த் தோன்றி இருக்கிறேன்
இருப்பே நானாய் விளங்கி

இருப்பில் நான்தோன்றியே இருக்கிறேன் மெய்யாமவ்
விருப்பே தான்நானெனும் பொருள்

மெய்யாம் இருப்பிற்குள் இருக்கிறேன் உயிராய்நான்
பொய்யா விளக்கென்றும் நானே

தானேயென இருக்கும் மெய்ப்பதி தன்னை
நானேயென விளக்கும் நான்

தானேயென சுத்தவெளியாய் இருக்கும் அதன்கண்
நானேயெனும் சித்துருவாய் நான்

தானேயென இருக்குமோர் பரிபூரணந் தானும்
நானேயென விளங்கவேதான் நான்

தானேயென நின்ற சத்தியச் சந்நிதியில்
நானேயென உள்ளேன் நான்

No comments: