Saturday, February 02, 2008

ஆதி பகவன்

ஆதியென நின்ற சுத்தவெளி தன்னில்
நானெனத் தோன்றும் பகவன்

ஆதியில் தோன்றும் பகவன்தன் பாதியை
ஆதிக்குத் தந்தான் உவந்து

ஆதியில் தோன்றும் பகவன்தன் வாலறிவால்
ஆதியும் தன்மெய் யுணரும்

ஆதியாய் நின்ற பராபரம் நானே
போதிநான் யார்க்கும் பகவன்

சர்வாந்தமாய் யாதுங்கடந் தாதியாம் நானே
ஆனந்தமாய் எங்கும்நிறை பகவன்

ஆதியாய் நின்ற பெருங்கடவுள் நானே
நீதியாய் நிறைந்த பகவன்

ஆதியெனும் ஒன்றாயுள பெருங்கடவுள் நானே
வீதியெங்கும் பற்பலவாம் பகவன்

ஆதியெனும் பேரிருப்பில் உதிக்கும் பேரறிவே
ஆதிக்கும் தீக்கைதரும் பகவன்

தானே தானாய் இருக்கும் ஆதியில்
ஆனேன் நானாய் பகவன்

தானே தானாய் இருக்கும் ஆதியே
நானே நானாம் பகவன்

தானே தானாய்த் தனையறிய ஆதிக்கு
நானே போதிக்கும் பகவன்

தன்னை அறியா திருந்த ஆதிக்குத்
தன்னை அறிந்தே யிருக்க போதிக்கும்
என்னை அறிந்தால் நீயே அப்பகவன்
என்னை அறிகிறேன் நானே

No comments: